ரோஹானி
ஜார்ஜெட் சென் (Georgette Chen) முதன்முதலில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தபோது, மலாய் மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்தார். அது அவருக்கு நட்புறவுகளை வளர்த்துக்கொள்ளவும், தனது புதிய சூழலில் வெளியாளாக உணராமல் இருக்கவும் உதவியது. அவருடைய நண்பர்கள் அவருக்குச் "செந்தனா" என்ற செல்லப்பெயரையும் சூட்டினர், இதன் பொருள் மலாய் மொழியில் "சந்தனம்" என்பதாகும். அவர்கள் ஏன் அவரை அப்படி அழைத்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சென்னுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவர்களில் ஒருவர், இங்குச் சித்தரிக்கப்பட்டுள்ள ரோஹானி இஸ்மாயில் (Rohani Ismail) ஆவார். ரோஹானி, நாஃபா (NAFA) என்று பரவலாக அறியப்படும் நன்யாங் நுண்கலைக் கழகத்தில் சென்னின் மாணவியாக இருந்தார். இவ்விரு பெண்களும் அடிக்கடி கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர். ரோஹானி பின்னர் தானும் ஓர் ஓவியரானார், மேலும் சிங்கப்பூரின் மலாய் ஓவியர்களுக்காக நீண்டகாலமாக இயங்கி வரும் சங்கமான 'பல்வேறு வளங்களைக் கொண்ட 'ஓவியர்கள் சங்கத்தில்' உறுப்பினராகவும் இருந்தார்.
ரோஹானியின் இவ்வுருவப்படம் வெறும் உடல் தோற்றத்தை மட்டும் பிரதிபலிப்பதில்லை. இது ஆசிரியர் மற்றும் மாணவிக்கு இடையேயான பிணைப்பையும், தங்கள் பயணத்தின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் இரண்டு ஓவியர்களுக்கு இடையேயான உறவையும், நாஃபாவை ஒரு ஓவியப் பள்ளியாக மட்டுமல்லாமல் அதற்கும் மேலாக மாற்றிய அதன் வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, நாஃபா சிங்கப்பூரில் ஓவியக் கல்விக்கான மையமாக மாறியது. சியோங் சூ பியெங் (Cheong Soo Pieng), லிம் ஹாக் தாய் (Lim Hak Tai) மற்றும் சென் போன்ற ஓவியர்கள் அடுத்த தலைமுறைக்குக் கற்பித்த இடம் அதுதான். ரோஹானியைப் போலவே, அவர்களின் மாணவர்களில் பலரும் தங்கள் சொந்த வழிகளில் சிங்கப்பூரின் ஓவியத்துறையை வடிவமைத்தனர்.
Artwork details
Frame measure: 79 x 68 cm
